Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

உ.பி. பஞ்சாயத்து தேர்தலில் உயிரிழந்த - தேர்தல் அதிகாரிகளின் குடும்பத்துக்கு குறைந்தது ரூ.1 கோடி வழங்க வேண்டும் : அலகாபாத் உயர் நீதிமன்றம் வலியுறுத்தல்

நாடு முழுவதும் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக உள்ளது. எனினும் உத்தர பிரதேசத்தில், பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் பணியாற்ற தேர்தல் அதிகாரிகள் பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். பலர் உயிரிழந்தனர். இந்நிலையில், மாநிலத்தில் கரோனா பரவலின் நிலை குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை நீதிபதிகள் சித்தார்த் வர்மா, அஜித் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் கூறியதாவது:

உ.பி.யில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், ஆர்டி-பிசிஆர் பரிசோ தனைகள் எதுவும் நடத்தப்படாமல், பஞ்சாயத்து தேர்தலில் அதிகாரி கள் பலர் பணியில் ஈடுபட கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர். அதனால் கரோனா பாதித்து பலர் உயிரிழந்துள்ளனர். அவர் களுடைய குடும்பத்துக்கு குறைந்த பட்சம் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்க மாநில அரசும் மாநில தேர்தல் ஆணையமும் பரிசீலிக்க வேண்டும். இதுகுறித்து விரைந்து முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கின் அடுத்த விசாரணை நடக்கும் போது, இதுகுறித்து நீதி மன்றத்தில் தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

மீரட்டில் உள்ள மருத்துவமனையில் 20 நோயாளிகள் உயிரிழந்தனர். அவர்களில் ஒரு சிலர் மட்டுமே கரோனாவால் இறந்தவர்கள். மற்றவர்கள் கரோனா வைரஸ் பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்த நிலையில், வேறு காரணங்களுக்காக இறந்தவர்கள் என்று மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை கேட்ட நீதிபதிகள், ‘‘கரோனாவால் இறந்தார்களா, இல்லையா என்ற சந்தேக மரணமாக இருந்தாலும், மரணத்தை மரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, 20 பேரும் உயிரிழந்தது குறித்து விரிவான அறிக்கையை மீரட் மருத்துவமனை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x