Published : 13 May 2021 03:11 AM
Last Updated : 13 May 2021 03:11 AM

வெளியில் இளைஞர்கள் சுற்றுவதால்கரோனா பாதிப்புக்கு உள்ளாகின்றனர் : ஐசிஎம்ஆர் தலைவர் கருத்து

இளைஞர் தேவையின்றி வெளியில்அதிகம் சுற்றுவதால் உருமாறிய கரோனாவால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கரோனா வைரஸ்2-ம் அலையின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களாகவே தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. குறிப்பாக இந்த 2-வது அலை யில் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.

இதன் காரணமாக வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருப்பினும், வைரஸ் பரவல் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் கரோனா வைரஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இளைஞர்கள் தேவையின்றி வெளியில் சுற்றுவதால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். என்று ஐசிஎம்ஆர் தலைவர் டாக்டர் பல்ராம் பார்கவா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

கரோனா பரவலின் 2-ம் அலை பற்றிய தரவுகளை முதல் அலையுடன் ஒப்பிடுகையில் வயது வாரியாக பார்க்கும்போது வைரஸ் பாதிப்பில் பெரியளவில் மாற்றமில்லை.

இப்போதும் 40 வயதுக்கு மேற்பட்டவர்களே கரோனா காரண மாக அதிகமாகப் பாதிக்கப் படுகின்றனர். இரண்டாம் அலையில் இளைஞர்கள் மத்தியிலும் வைரஸ் பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது.

தற்போது 2 காரணங்களால் வைரஸ் அதிகமாக பரவி வருகிறது. இளைஞர்கள் தேவையின்றி அதிகம் வெளியே செல்ல தொடங்கியுள்ளனர். மேலும், தற்போது நாட்டில் சில புதிய உருமாறிய கரோனா வைரஸ் வகைகளும் கண்டறியப்பட்டு வருகின்றன.

இந்த இரண்டு காரணங்கள் தான் இளைஞர்கள் மத்தியில் கரோனா வைரஸ் வேகமாக பரவ காரணம். தேவையில்லாமல் இளைஞர்கள் வெளியில் வராமல் இருப்பது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் கே.விஜய் ராகவன் கூறும்போது, “முதல் அலையில் மீண்டு வந்த நாம், இப்போது 2-ம் அலை பாதிப்பில் சிக்கிக் கொண்டுள்ளோம். கரோனா 3-வது அலையும் வரவுள்ளது. அதற்கு நாம் தயாராக வேண்டும்.

அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியம். இந்த 3-ம் அலையில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படுவர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x