Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் அறிக்கை:
தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு, மாலத்தீவு கடற்பகுதிகளில் மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த காற்று வீசக்கூடும். நாளை (14-ம் தேதி)தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி வடக்கு, வடகிழக்கு திசையில் நகர்ந்து 16-ம் தேதி கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் புயலாக உருவெடுக்க கூடும். எனவே, குமரிக்கடல், தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு கடல் பகுதி, இந்திய பெருங்கடல் பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்று, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, மீனவர்கள் இந்த நாட்களில் கன்னியாகுமரி உட்பட புயல் எச்சரிக்கை உள்ள கடற்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம். ஆழ்கடல் மீன்பிடிப்புக்காக ஏற்கெனவே கடலுக்கு சென்றுள்ள மீனவர்கள் நாளை காலைக்குள் கரை திரும்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT