Published : 13 May 2021 03:12 AM
Last Updated : 13 May 2021 03:12 AM

பெரம்பலூரில் சுகாதாரத் துறை சார்பில் வீடு, வீடாக கரோனா பரிசோதனை :

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத் துறை சார்பில் வீடு, வீடாகச் சென்று கரோனா தொற்று பரிசோதனை மற்றும் உடல்நிலை பரிசோதனை செய்யும் முகாம் நேற்று தொடங்கியது.

பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து, மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கீதாராணி பேசியது: சுகாதாரத் துறை சார்பில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 42 பேர் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பெரம்பலூர், அரணாரை, துறைமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள 21 வார்டுகளில் வீடு, வீடாகச் சென்று பொதுமக்களை பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு முதற்கட்ட சிகிச்சையை அளிக்க உள்ளனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில், உதவி திட்ட மேலாளர் கலைமணி, வட்டார தலைமை மருத்துவர் சூரியபிரபா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x