Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிரான கொலை வழக்கில் டெல்லி போலீஸார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித் துள்ளனர்.
கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மல்யுத்த வீரர் சாகர் தான்கட் என்பவரை அவரின் வீட்டிலிருந்து சுஷில் குமார் மற்றும் அவரின் நண்பர்கள் டெல்லியில் உள்ள சத்ராஸல் அரங்கிற்கு அழைத்து சென்றுள் ளனர். அங்கு சாகரை கடுமையாகத் தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். மோசமான காயங்களுடன் சத்ராஸல் அரங்கில் மயங்கிக் கிடந்த சாகரை அவரது நண்பர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தார். சிகிச்சை பலன் அளிக்காமல் சாகர் உயிரிழந்தார். இதையடுத்து கொலைவழக்கு பதிவு செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT