Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

10 பேர் உயிரிழந்த ஆந்திர வெடி விபத்து சுண்ணாம்பு கல்குவாரி ஒப்பந்ததாரர் கைது :

கடப்பா: ஆந்திராவின் கடப்பா மாவட்டம் மாமிள்ளபள்ளி அருகே உள்ள திருமல கொண்டா என்ற இடத்தில் உள்ள சுண்ணாம்புக்கல் குவாரியில் கடந்த சனிக்கிழமை பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில்10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக 5 துறை அதிகாரிகளை கொண்ட விசாரணைக் குழுவை ஆந்திர அரசு நியமித்துள்ளது. இக்குழுவினர் நேற்று விசாரணையை தொடங்கினர்.

இதுகுறித்து கடப்பா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்புராஜன் நேற்று கூறும்போது, “புலிவேந்துலாவில் இருந்து சம்பவ இடத்துக்கு காரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது சட்டப்படி குற்றமாகும். போதிய பாதுகாப்பை உறுதி செய்யாமல் ஜெலட்டின் குச்சிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஜெலட்டின் குச்சிகளை காரிலிருந்து இறக்கும்போது தொழிலாளர்கள் அதை அலட்சியமாக கையாண்டதால் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குவாரி ஒப்பந்ததாரர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் பலர் கைது செய்யப்படலாம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x