Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வைகோ வேண்டுகோள் :

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்டஅறிக்கை:

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் 27 ஆண்டுகளாக சிறைதண்டனை அனுபவித்து வருகின்றனர். இவர்களை தமிழகஅரசே விடுதலை செய்யலாம்என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதன்படி, 7 பேரையும் விடுதலை செய்யுமாறு ஆளுநருக்கு அரசு கோரிக்கை விடுத்தது.

2 ஆண்டுகள் கடந்தும் ஆளுநர் விடுதலை செய்யவில்லை. 7 பேரையும் விடுதலை செய்யுமாறு திமுக வலியுறுத்தி வந்தது. எனவே, 7 பேரையும் விடுதலை செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணை பிறப்பித்து, தமிழர்களின் உள்ளத்தில் பால்வார்க்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x