Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM
நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த மாங்கோடு காவல் பகுதிக்குட்பட்ட நாடுகாணி குன்னு காப்புக்காட்டில் அய்யன் கொல்லிமலை பகுதியை சேர்ந்த மாணிக்கம் (எ) சண்முகராஜ் (45), விக்கிரமராஜா (37), ரகு (45), பேரின்ப சிவம் (எ) மணி (37), ராஜ்குமார் (எ) மணி (37), ரமேஷ் (20) ஆகியோர் சட்டவிரோதமாக அத்துமீறி காப்புக்காட்டுக்குள் நுழைந்து கிராண்டிஸ் மரங்களை வெட்டியுள்ளனர்.
அவர்கள் மீது குற்ற வழக்கு பதிவு செய்ததோடு, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில் சேரம்பாடி சரகர் ஆனந்தகுமார் தலா ரூ. 4000 என மொத்தம் ரூ.24 ஆயிரம் அபராதமாக வசூலித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT