Published : 11 May 2021 03:12 AM
Last Updated : 11 May 2021 03:12 AM
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையைச் சேர்ந்த மன வளர்ச்சி குன்றிய இளைஞர் சந்தோஷ் பாலாஜி, அரசு வழங்கும் உதவித் தொகையில் ரூ.1000-ஐ தமிழக முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளார்.
தேவகோட்டை சிலம்பனி சன்னதி தெருவில் வசிப்பவர்கள் ராஜேஸ்வரன் - யோக லெட்சுமி தம்பதி. இவர்களது மகன் சந்தோஷ் பாலாஜி (21)(ஆட்டிசம்) மனவளர்ச்சி குன்றிய இளைஞர்.
அன்றாட வாழ்வாதாரத் துக்கே சிரமப்பட்டு வரும் இக்குடும்பத்தினர், சந்தோஷ் பாலாஜிக்கு, தமிழக அரசிடமிருந்து கிடைக்கும் உதவித்தொகையில் ரூ.1000-க்கு டிடி எடுத்து, அத னுடன் முதல்வருக்கு மகன் எழுதிய கடிதத்தையும் வைத்து கரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT