Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM
கோவை: கோவை மாநகரில் கரோனா பரவலை கட்டுப்படுத்த, பொதுவெளியில் செல்வோர் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் நேற்று காலை பொதுமக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதையடுத்து, மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் திடீர் ஆய்வில் ஈடுபட்டார். அங்கு முகக்கவசம் அணியாதவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாத 8 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT