Published : 08 May 2021 03:13 AM
Last Updated : 08 May 2021 03:13 AM
தமிழக அரசு தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் தொகுதி திமுக எம்எல்ஏ கோவி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவைச் செயலாளர் கி.சீனிவாசன் நேற்று வெளியிட்ட அறிவிப்பில், “அரசு தலைமைக் கொறடாவாக திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி செழியன் நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் இருந்து யாரும்இடம்பெறவில்லை. இந்நிலையில் திருவிடைமருதூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அப்பகுதியைச் சேர்ந்த கோவி செழியன் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT