Published : 07 May 2021 03:13 AM
Last Updated : 07 May 2021 03:13 AM

அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கு : படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் : அரக்கோணம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி கோரிக்கை

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான படுக்கை வசதிகளை அதிகரிக்கவேண்டும் என கரோனா தடுப்பு சிறப்பு கண்காணிப்பு அலுவலரி டம் சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

ராணிப்பேட்டை மாவட்டத் தில் கரோனா தடுப்பு சிறப்புஅதிகாரியாக நியமிக்கப்பட் டுள்ள லட்சுமி பிரியா, அரக் கோணம் அரசு மருத்துவமனை யில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் சு.ரவி சார்பில் அவரது ஆதரவாளர்கள் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது. அதில், ‘‘அரக்கோணம் அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகம் சிகிச்சை பெற்று வரும் நிலையில் போதிய படுக்கை வசதிகள் இல்லாமல் பொதுமக்கள் தரையில் படுத்துக் கொண்டுள்ளனர். போதிய ஆக்சிஜன் வசதி இல்லாமல் தினசரி சில உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. எனவே, படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும். அரசு மருத்துவமனைக்கு அருகில் உள்ள சிஎஸ்ஐ சென்ட்ரல் மேல்நிலை பள்ளியில் கூடுதல் கரோனா சிகிச்சை வார்டு ஏற்படுத்த வேண்டும்.

அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன், கரோனா தடுப்பூசி, ரெம்டெசிவர் உள் ளிட்ட மருந்துகளை இருப்பில் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூடுதல் மருத்துவர்கள், செவிலியர் களை நியமிக்க வேண்டும். கரோனா நோயாளிகளை மேல் சிகிச்சைக்கு அனுப்ப கூடுதலாக ஒரு 108 ஆம்புலன்ஸ் வழங்க வேண்டும். சி.டி ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும்’’ உள்ளிட்டவற்றை குறிப்பிட்டுள்ளனர். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x