Published : 06 May 2021 03:14 AM
Last Updated : 06 May 2021 03:14 AM
``ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்” என, மாவட்ட ஆட்சியரிடம், எம்.ஆர்.காந்தி வலியுறுத்தினார்.
குமரியில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் நடுத்தர, ஏழை நோயாளிகள் உரிய சிகிச்சை பெறமுடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே, கரோனா சிகிச்சைக்கான கூடுதல் ஏற்பாடுகளை அரசு மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவிலில் வெற்றிபெற்ற பாஜகவின் எம்.ஆர்.காந்தி நேற்று நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்தை சந்தித்து மனு அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே ஏற்பாடு செய்திருந்த படுக்கைகளில் நோயாளிகள் நிரம்பியுள்ளதால், கூடுதலாக படுக்கை வசதிகளையும், ஊட்டச் சத்துமிக்க உணவு வசதிகளையும் ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT