Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
புதுடெல்லி: கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்குதான் ஒரே வழி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தி உள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்குதான் ஒரே வழி. இதனால் பாதிக்கப்படும் ஏழை மக்களுக்கு ‘நியாய்’ திட்டத்தை செயல்படுத்தி பாதுகாப்பு அளிக்க வேண்டும். மத்திய அரசின் செயலற்ற தன்மையால் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்து வருகின்றனர்” என பதிவிட்டுள்ளார். கடந்த மக்களவைத் தேர்தலின்போது, காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நியாய் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தது. இதன்படி, ஏழை குடும்பத்துக்கு ஆண்டுக்கு தலா ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என அறிவித்தது. இந்த திட்டத்தைத்தான் செயல்படுத்த வேண்டும் என ராகுல் இப்போது வலியுறுத்தி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT