Published : 05 May 2021 03:13 AM
Last Updated : 05 May 2021 03:13 AM
திருப்பூர்: தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கத் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் நேற்று கூறும்போது, "பனியன் ஆடை தயாரிப்புக்கு மூலப்பொருளான நூல் விலை அபரிமிதமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுதவிர மூலப்பொருட்களான பேக்கிங் மெட்டீரியல்கள், எலாஸ்டிக் டேப்ஸ், பாலித்தீன் பை விலை உயர்வு, லாரி வாடகை, வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு, நிட்டிங், பிளீச்சிங், டையிங், பிரிண்டிங், காம்பேக்டிங் ஆகிய ஜாப் ஓர்க் கட்டண உயர்வு ஆகிய அனைத்து தரப்பிலும் விலை மற்றும் கட்டணம் உயர்ந்துள்ளது. எனவே, பனியன் தயாரிப்புகளின் விலையை கடந்த 1-ம் தேதி முதல் 15 சதவீதம் உயர்த்துவது என ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு, கடந்த 1-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த தவிர்க்க முடியாத விலையேற்றத்தை வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் முகவர்கள் ஏற்று, தயாரிப்பாளர்களுக்கு எப்போதும்போல ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT