Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM
திருவண்ணாமலை: தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக வங்கி பணிக்கு ‘ஆன்லைன்’ மூலமாக பயிற்சி வகுப்பு நடத்தப்படவுள்ளது என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள ஜுனியர் அசோஷியேட்ஸ் பணிக்கான முதன்மை தேர்வு வரும் ஜுன் மாதம் நடைபெறவுள்ளது. இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் ‘ஆன்லைன்’ வழியாக நடைபெறும். திங்கள்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயிற்சி அளிக்கப்படும். காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ‘ஆன்லைன்’ மூலம் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் தனித்தனி ஆசிரியர்களை கொண்டு வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. மேலும், ஒவ்வொரு வாரமும் மாதிரி தேர்வுகள் நடத்தப்படும்.
பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 7-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். திருவண்ணாமலை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் 04175 – 233381 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு பெயரை பதிவு செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT