Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

சென்னையில் ரூ.27 லட்சம் மதிப்பு தங்கம் பறிமுதல் :

சென்னை விமான நிலையத்தில் இரு நபர்களிடம் இருந்து ரூ.27.46 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

சார்ஜாவில் இருந்து விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது வந்த பெரம்பலூரைச் சேர்ந்த அஜித்குமார் (22) என்பவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை சோதனை செய்ததில், ரூ.18.55 லட்சம் மதிப்புள்ள 385 கிராம் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இதேபோல், துபாயில் இருந்து வந்த சென்னையைச் சேர்ந்த நூர்முகமது உஸ்மான் (21) என்பவரிடம் இருந்து ரூ.8.91 லட்சம் மதிப்புள்ள 185 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x