Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், பிரயாஸ் திட்டத்தின் கீழ், பொதுத் துறை, தனியார் துறை நிறுவனங்களில் ஓய்வு பெற்றவர்களுக்கு, அவர்கள் ஓய்வுபெற்ற நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது.
இணையவழி கருத்தரங்கு
தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அலுவலகம் சார்பில், பிரயாஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இணையவழிக் கருத்தரங்கு நடைபெற்றது.இதில், இந்தியன் ஆயில் நிறுவனம், அசோக் லேலண்ட் நிறுவனம், ஃபோர்ட்ஸ் இந்தியா லேபாரட்டரி நிறுவனம் மற்றும் டி.தாமஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய நிறுவனங்களிலிருந்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு, அவர்களது பணிக்காலம் நிறைவடையும் நாளன்றே ஓய்வூதியத்தொகைக்கான ஆணை, மின்னஞ்சல் மூலம் வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கில், சென்னை வடக்கு மண்டல அலுவலக ஓய்வூதியப் பிரிவு மண்டல ஆணையர் டாக்டர் சுதிர்குமார் ஜெய்ஸ்வால், சென்னை தெற்கு மண்டல அலுவலக ஓய்வூதியப் பிரிவு மண்டல துணை ஆணையர் பி.ஆர்.னிவாசன் ஆகியோர் பங்கேற்றனர்.
சென்னை வடக்கு மண்டல அலுவலகத்தின், மண்டல வைப்புநிதி ஆணையர் பிரனித் ஜோஷி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT