Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM
மதுரை மாவட்டம், சோழவந்தான் (தனி) தொகுதியை அதிமுகவிட மிருந்து திமுக கைப்பற்றியது.
சோழவந்தான் சட்டப்பேரவை (தனி) தொகுதியில் திமுக வேட் பாளர் ஏ.வெங்கடேசன், அதிமுக வேட்பாளர் கே.மாணிக்கம், அமமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளர் எம்.ஜெயலெட்சுமி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.செங்கண்ணன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.யோகநாதன், புதிய தமிழகம் கட்சி வேட்பாளர் எஸ்.இந்துராணி, மை இந்தியா பார்ட்டி மற்றும் 11 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இத்தொகுதியில் பதிவான வாக்குகள் 22 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசன் முன்னிலையில் இருந்தார். அதிமுக வேட்பாளர் மாணிக்கம் 11, 13, 15-வது சுற்றில் மட்டும் கூடுதல் வாக்குகள் பெற்றார். இறுதியில் திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசன் 83,377 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார். அதிமுக வேட்பாளர் கே.மாணிக்கம் 65,995 வாக்குகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார். வாக்கு வித்தியாசம் 17,382.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜி.செங்கண்ணன் 14,080 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார். தேமுதிக வேட்பாளர் எம்.ஜெயலெட்சுமி 3,556 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் எஸ்.யோகநாதன் 3,101 வாக்குகள் பெற்றார்.
வாக்கு எண்ணிக்கை முடிவில், சோழவந்தான் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜஸ்டின் ஜெயபால், வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசனிடம் சான்றிதழை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT