Published : 04 May 2021 03:13 AM
Last Updated : 04 May 2021 03:13 AM

முதலீட்டை ஈர்த்து தென் மாவட்டங்களில் - தொழில் நிறுவனங்களை அமைக்க வேண்டும் : மு.க.ஸ்டாலினுக்கு மடீட்சியா வேண்டுகோள்

பின்தங்கிய தென் மாவட்டங்களில் பெரிய முதலீட்டை ஈர்த்து பெரும் தொழில் நிறுவனங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மடீட்சியா தலைவர் பா.முருகா னந்தம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். கடந்த திமுக ஆட்சியில் சட்டப்பேரவைத் தலைவராக இருந்த பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் முயற்சியால் முதல்வராக இருந்த கருணாநிதி மடீட்சியா ஆடிட்டோரியத்தைத் தொடங்கி வைத்தார். தற்போது திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. கரோனா தொற்றை தடுக்க தேவையான செயல்திட்டத்தை வகுத்து தமிழக மக்களின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

தொழிற்துறையில் பின்தங்கிய தென் மாவட்டங்களில் பெரிய முதலீட்டை ஈர்த்து பெரிய தொழில் நிறுவனங்களை அமைக்க உதவ வேண்டும்.

மதுரை-தூத்துக்குடி தொழில் தட சாலை திட்டத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண் டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனையை தொடங்க விரைவாக நிதி ஒதுக்கீடு செய்து அந்த திட்டத்தை விரைவாக முடிக்க உதவ வேண்டும். மதுரை விமானநிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x