Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

தோல்வி குறித்து ஆராய குழு : கேரள காங். தலைவர்கள் பேட்டி :

கேரள தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) தோல்வி கண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறும்போது, “இதுபோன்று தேர்தல் முடிவுகள் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. ஏன் இந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்பது குறித்து அமர்ந்து ஆலோசனை செய்யவுள்ளோம். இந்தத் தேர்தல் பிரச்சாரத்தின் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான அரசு மீது பல்வேறு புகார்களை வைத்தோம். ஆனால் அது எடுபடவில்லை. விரைவில் காங்கிரஸ் தலைவர்கள் கூடவுள்ளோம். தேர்தல் தோல்வி குறித்து ஆராய குழு அமைக்கப்படும்" என்றார்.

காங்கிரஸ் மூத்த தலைவர் உம்மன் சாண்டி கூறும்போது, “தேர்தல் தோல்வியை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இந்தத் தோல்வியால் துவண்டு விடமாட்டோம். இதை சவாலாக எடுத்துக் கொண்டு அடுத்த தேர்தலுக்காக கடுமையாக உழைப்போம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x