Published : 02 May 2021 03:13 AM
Last Updated : 02 May 2021 03:13 AM

இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள - 44,000 கோயில்களில் தணிக்கை செய்ய வேண்டும் : உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் வழக்கு

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 44 ஆயிரம் கோயில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்யக்கோரி தாக்கலான மனு மீதான விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்குஉயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.

கோவை ஈஷா யோகா மையம்சார்பில் மதுரை உயர் நீதிமன்றக்கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டகோயில்கள் உள்ளன. இக்கோயில்களுக்கு சொந்தமாக பல கோடிரூபாய் மதிப்புள்ள அசையும்,அசையா சொத்துக்கள் உள்ளன. இருப்பினும் பல கோயில்களில் ஒரு கால பூஜை கூட நடைபெறுவதில்லை. சில கோயில்களுக்கு ரூ.10 ஆயிரம்முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் வருகிறது. 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்களில் ரூ.10ஆயிரத்துக்கு கீழ் வருமானம்வருகிறது. இதனால் அனைத்துகோயில்களின் சொத்துக்கள் மற்றும் வருமானத்தை தணிக்கை செய்ய வேண்டும்.

இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி அறநிலையத் துறைக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே,தமிழகத்தில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான 44 ஆயிரம் கோயில்களின் சொத்துக்கள், வருமானத்தை தணிக்கைசெய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப் பட்டிருந்தது. இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையை ஜூன் 1-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x