Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
பொள்ளாச்சி நகர அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நகரத் தலைவர் அருண்குமார் தலைமையில் சங்கத்தின் நிர்வாகிகள், பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அம்மனுவில் ‘தமிழகம் முழுவதும் மாநகரம் மற்றும் நகராட்சிப் பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சலூன் தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கடைகளை நடத்த அனுமதிக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT