Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

பராமரிப்பு பணியால் : மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் :

தாம்பரம் அருகே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், இந்த தடத்தில் மின்சார ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு தடத்தில் தாம்பரம் - வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1.15 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x