Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
தாம்பரம் அருகே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், இந்த தடத்தில் மின்சார ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு தடத்தில் தாம்பரம் - வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1.15 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT