Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
அப்போது அவர் அதிக அளவில் மதுபோதையில் உள்ளதால் கருவியை வைத்து சோதனை செய்து அந்த நபருக்கு அபராதம் விதித்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், பணியில் இருந்த உதவி ஆய்வாளர் செல்வத்தை தாக்கியுள்ளார். இதில் செல்வம் மயக்கமடைந்தார்.
அருகில் இருந்த சக காவலர்கள், செல்வத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் உதவி ஆய்வாளரைத் தாக்கி தப்ப முயன்ற அந்த நபரைப் பிடித்து சேலையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு நடத்தப்பட்ட விசாரணையில் குரோம்பேட்டையைச் சேர்ந்த அஸ்வின் ராஜ் (26) என்பதும் பிரபல தனியார் இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீஸார் அஸ்வின் ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT