Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

மதுரையில் 4 வாக்கு எண்ணும் மையங்களில் - துணை ஆணையர்கள், கூடுதல் எஸ்பி.க்கள் கண்காணிப்பு :

மதுரையில் நான்கு வாக்கு எண்ணும் மையங்களில் துணை காவல் ஆணையர்கள், கூடுதல் எஸ்பி.க்கள் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

மதுரை மாவட்டத்தில் 10 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றில் மதுரை மேற்கு, தெற்கு, வடக்கு, மத்தி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் மதுரை மருத்துவக் கல்லூரியிலும், மதுரை கிழக்கு, மேலூர் தொகுதிக்கான இயந்திரங்கள் ஒத்தக்கடையில் உள்ள வேளாண்மைக் கல்லூரியிலும், திருமங்கலம், திருப்பரங்குன்றம் தொகுதிகளின் இயந்திரங்கள் தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், உசிலம்பட்டி, சோழவந்தான் தொகுதிக்கான இயந்திரங்கள் தனக்கன்குளத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

மருத்துவக் கல்லூரி, பாலிடெக் னிக் கல்லூரி வாக்குப் பதிவு மையங்களில் மாநகர் காவல் துறையும், வேளாண்மை கல்லூரி, அண்ணா பல்கலைக்கழக மையம் ஆகிய இடங்களில் மாவட்டக் காவல் துறையும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.

ஒவ்வொரு மையத்திலும் 3 ஷிப்ட் முறையில் டி.எஸ்.பி. தலைமையில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட போலீஸார் சுழற்சி முறையில் மூன்றடுக்குப் பாதுகாப் பில் ஈடுபட்டுள்ளனர். மாநகர் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்கா, மாவட்டக் காவல் கண் காணிப்பாளர் சுஜித்குமார் உள் ளிட்ட காவல் அதிகாரிகள் பாதுகாப்புப் பணியை ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் மதுரையில் உள்ள வாக்கு எண்ணும் மையங் களில் போலீஸ் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளது. மே1-ம் தேதி இரவு வழக்கத்தைவிடக் கூடுதல் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (மே 2) ஒவ் வொரு மையத்திலும் கூடுதல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

வாக்குகள் எண்ணுவதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக பாதுகாப்பை பலப்படுத்துவது வழக்கம். இன்று காலை முதல் ஒவ்வொரு மையத்திலும் தலா 300-க்கும் மேற்பட்ட போலீ ஸார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டுள்ளனர்.

கரோனா பரவலால் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகே கட்சியினர், பொதுமக்கள் கூட ஏற்கெனவே தடை விதிக்கப் பட்டிருக்கும் நிலையில், தேவை யின்றி யாரும் வாக்கு எண்ணும் மையத்துக்கு வர வேண்டாம். சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு துணை காவல் ஆணை யர்கள், கூடுதல் எஸ்பி.க்கள் தலைமையில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுவர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x