Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM
உசிலம்பட்டி கிருஷ்ணா வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவியர் தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சிலமலையில் கிராம தங்கல் திட்டத்தின் கீழ் களப்பணி ஆற்றினர். அப்போது உர நிர்வாகம், அசோலா தயாரிப்பு முறை, மண்வள மேம்பாடு உட்பட பல்வேறு தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
உழவன், விவசாயம் போன்ற செயலிகள் குறித்து மாணவிகள் விளக்கினர். இதில் பருவ நிலை, மழை பெய்வதற்கான வாய்ப்பு, காற்றின் ஈரப்பதம், மண் வளம், பல்வேறு விளைபொருட்களின் விலை, ஏற்றுமதிக்கான வழிமுறைகள், மானியத் திட்டங்கள் உட்பட பல்வேறு விவரங்கள் இதில் இருக்கும். விவசாயிகள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களையும் இதில் கேட்டுப் பயன்பெறலாம் என்று தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த செயலியை தங்கள் மொபைல் போன்களில் பதிவிறக்கம் செய்வது, அதில் உள்ள விவரங்களை அறிந்து கொள்வது குறித்து விவசாயிகள் முருகானந்தம், சேகர், செந்தில், அம்மையன், ராமன் ஆகியோருக்கு மாணவிகள் பயிற்சி அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT