Published : 02 May 2021 03:14 AM
Last Updated : 02 May 2021 03:14 AM

திருச்சி மத்திய மண்டலத்தில் 1,897 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சி

அரியலூரில் 38, கரூரில் 175, நாகப் பட்டினத்தில் 233, பெரம்பலூரில் 43, புதுக்கோட்டையில் 164, தஞ்சாவூரில் 492, திருவாரூரில் 224, திருச்சியில் 528 என மத்திய மண்டலத்தில் மொத்தம் 1,897 பேருக்கு புதிதாக கரோனா தொற்று நேற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. திருச்சியில் 5 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்தனர்.

அரசு பணியாளர் 5 பேருக்கு கரோனா

திருச்சி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் பணிக்கு செல்லவி ருந்த அரசு பணியாளர்கள், காவல் துறையினர் மற்றும் முகவர்கள், செய்தியாளர்கள் உள்ளிட்டோருக்கு அண்மையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், அரசு பணியாளர்கள் 5 பேருக்கு கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு பதிலாக மாற்றுப் பணியாளர்கள், வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x