Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM

குடியாத்தத்தில் புள்ளி மான் மீட்பு :

குடியாத்தத்தில் தண்ணீர் தேடி வந்த புள்ளி மான் மீட்கப்பட்டு வனப்பகுதியில் விடப் பட்டது.

குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஏரிக்கரை பகுதியில் தண்ணீர் தேடி வந்த இரண்டு புள்ளி மான்களை நாய்கள் நேற்று அதிகாலை துரத்தியுள்ளன. இதில், ஒரு மான் தண்ணீரில் குதித்து தப்பிய நிலையில் ஒரு மான் மட்டும் நாய்களிடம் சிக்கியது. நாய்கள் கடித்ததில் காயம் அடைந்த மானை அப்பகுதி மக்கள் மீட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் பேரணாம்பட்டு வனச்சரகர் சங்கரய்யா மற்றும் வனக்கா வலர்கள் விரைந்து சென்று மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

பின்னர், அந்த மானை குண்டலப் பல்லி காப்புக்காட்டில் வனத் துறையினர் விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x