Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM
சிறப்பு டிஜிபி மீதான பாலியல் வழக்கை 6 வாரங்களில் முடிக்குமாறு சிபிசிஐடி போலீஸாருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மூத்த ஐபிஎஸ் அதிகாரியான சிறப்புடிஜிபி மீது குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை எடுத்துவிசாரித்து வருகிறது. இந்தவழக்கை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று நீதிபதிஎன்.ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நேற்று மீண்டும்விசாரணைக்கு வந்தது.
வழக்கில் 106 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 30சாட்சிகளிடம் விசாரிக்கப்பட உள்ளதாகவும் மாநில அரசு தலைமைகுற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் தெரிவித்தார். தமிழக அரசுசார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி, ஏற்கெனவே விசாகா கமிட்டி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு, முடிவுக்காக காத்திருப்பதாக கூறினார்.
விசாரணையை முடிக்க 4 முதல்8 வாரம் தேவை என விசாரணைஅதிகாரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை 6 வாரங்களுக்குள் விசாரித்து நீதிமன்றத்தில்குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும் என்று நீதிபதி கெடு விதித்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT