Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
ஊத்தங்கரை அருகே வாகனங்கள் மோதிய விபத்தில் கார், இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. இருசக்கர வாகனத்தில் வந்த பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் வசித்து வருபவர் நந்து (26). இவர் நேற்று தனது மனைவியை பார்ப்பதற்காக இருசக்கர வாகனத்தில் பெங்களூருவில் இருந்து தனது நண்பர் சசியுடன் விழுப்புரம் நோக்கிச் சென்றார்.
கிருஷ்ணகிரி - திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலையில் ஊத்தங்கரை அருகே தனியார் பள்ளி அருகே சென்றபோது, காரும் - இருசக்கர வாகனமும் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார், இருசக்கர வாகனம் ஆகியன தீப்பற்றி எரியத் தொடங்கின. மேலும், இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் நந்து படுகாயங்களுடன் உயிரிழந்தார்.
மேலும் படுகாயம் அடைந்த சசி மற்றும் காரில் வந்த கோவிந்தராஜ் ஆகியோரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் தீப்பற்றி எரிந்த கார், இருசக்கர வாகனம் உள்ளிட்டவை மீது தண்ணீர் பீய்ச்சியடித்து அணைத்தனர்.
இதுதொடர்பாக ஊத்தங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT