Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
அம்பத்தூர் மண்டல வருங்கால வைப்பு நிதி அலுவலகம் சார்பில், வரும் 10-ம் தேதி பயனாளிகளுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, பயனாளிகள் தங்களுடைய பெயர், யுஏஎன் எண், பிஎஃப் அல்லது பிபிஓ எண், குறைகள், வாட்ஸ்-அப் எண் ஆகிய விபரங்களுடன் வரும் 5-ம் தேதிக்குள் 89037 66548 என்ற செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி பதிவு செய்துக் கொள்ள வேண்டும்.
இதையடுத்து, வரும் 10-ம் தேதி நடைபெறும் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகள் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் அழைக்கப்பட்டு, அவர்களிடம் குறைளைக் கேட்டறிந்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வருங்கால வைப்பு நிதி அம்பத்தூர் மண்டல உதவி ஆணையர் எம்.குமரவேல் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT