Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM

பெரும்புதூர் அருகே - அண்ணன்-தம்பி கொலை வழக்கில் 4 பேர் கைது :

மாடம்பாக்கத்தைச் சேர்ந்த பொன்னையா (36), ரமேஷ் (35), ராஜு(39), மூகாம்பிகை நகர் 14-வதுதெருவைச் முத்து(40) ஆகியோர் `மாடம்பாக்கம் நண்பர்கள் குழு' என்ற பெயரில் 3 இடங்களில் தண்ணீர் பந்தல் வைத்துள்ளனர்.

இதற்கு, மாடம்பாக்கம் வள்ளலார் நகரைச் சேர்ந்த முகமது ஹனீபா மகன்கள் இமாம் அலி(19),முகமது இஸ்மாயில்(31), இம்ரான்(35) எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இவர்களிடையே முன் விரோதம் இருந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாடம்பாக்கம் ஏரிப் பகுதியில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இமாம் அலி, முகம்மது இஸ்மாயில் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். இம்ரான் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

தகவலறிந்த டிஐஜி சாமுண்டீஸ்வரி, காஞ்சி எஸ்.பி. சண்முகப்பிரியா,போலீஸார் அங்கு சென்றுவிசாரணை நடத்தினர். இது தொடர்பாக மணிமங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து, பொன்னையா, ராஜு, ரமேஷ், முத்து ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x