Published : 01 May 2021 03:15 AM
Last Updated : 01 May 2021 03:15 AM
புதுச்சேரியில் உள்ள தனியார் பரிசோதனை நிலையங்கள், மருத்துவக் கல்லூரிகளில் ஆர்டிபிசிஆர் முறையில் கரோனாபரிசோதனை செய்ய ரூ.500கட்டணம் நிர்ணயம் செய்யதுள்ளது. கூடுதல் கட்டணம் வசூல்செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இதுதொடர்பாக புதுச்சேரி அரசு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரியில் உள்ள அனைத்து தனியார் பரிசோதனை நிலையங்கள், தனியார் மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் (ஆர்டிபிசிஆர்) கரோனா பரிசோதனைக்கு கட்டணமாக ஒரு பரிசோதனைக்கு ரூ.500 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தனியார் பரிசோதனை நிலையங்கள், மருத்துவக் கல்லூரி பரிசோதனை நிலையங்களில் அரசு நிர்ணயித்த ரூ.500-க்கு மேல் வசூல் செய்யப்பட்டு புகார் வந்தால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
மேலும், (ஆர்டிபிசிஆர்) கரேனா பரிசோதனை புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் மற்றும் இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனையிலும் முற்றிலும் இலவசமாக பொதுமக்களுக்கு எடுக்கப்படுகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT