Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

சின்னமனூர் நகராட்சியில் - நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிப்பு :

தேனி மாவட்டம், சின்னமனூரில் நவீன இயந்திரம் மூலம் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

சின்னமனூர்

சின்னமனூர் நகராட்சி முழுவதும் நவீன இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடை பெற்று வருகிறது.

தேனி மாவட்டம், சின்னமனூரில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதுவரை 75-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்குள்ள 166 தெருக்களில் 19 தெருக்கள் அதிக பாதிப்பு உள்ள பகுதிகளாக கண்டறியப்பட்டன.

கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த நகராட்சி சார்பில் வாகனங்கள் மூலம் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில், நவீன இயந்திரம் மூலம் நகராட்சி முழுவதும் கிருமிநாசினி தெளிக் கும் பணி நடைபெறுகிறது.

‘கிரிப் மாஸ்டர்' எனப்படும் இந்த நவீன இயந்திரம் 500 லிட்டர் கொள்ளளவு கொண்டது, இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். கடந்த ஆண்டு கரோனா பரவலின் போது, பொது சுகாதாரத்துறை மூலம் சின்னமனூர் நகராட்சிக்கு வழங்கப்பட்டது.

இந்த இயந்திரத்தில் 20:1 என்ற விகிதத்தில் தண்ணீருடன் லைசால் எனப்படும் கிருமிநாசினி கலக்கப்படுகிறது. இந்த இயந் திரம் ஒரே நேரத்தில் அதிக பரப்பளவில் தெளிக்கும் திறன் கொண்டது.

ஆணையாளர் ஷியாமளா தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில் ராம்குமார் உள்ளிட்ட அலுவலர்கள் இப்பணியில் ஈடு பட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x