Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

காதில் அணியும் தங்க வளையம் கீழடி அகழாய்வில் கண்டெடுப்பு :

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி அகழாய்வில் காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. கீழடி, கொந்தகையில் தலா மூன்று குழிகளும், அகரத்தில் ஒரு குழியும் தோண்டப்பட்டுள்ளன. இந்நிலையில் கீழடியில் காதில் அணியும் தங்க வளையம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த வளையத்தை நீட்டினால் 4.5 செ.மீ. நீளமும், வளையமாக இருந்தால் 1.99 செ.மீ. விட்டமும் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x