Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

ஈரோடு மாவட்டத்துக்கு 8500 டோஸ் கரோனா தடுப்பூசி வருகை : ஆட்சியர் கதிரவன் தகவல்

ஈரோடு மாவட்டத்திற்கு 8500 டோஸ் கரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாக ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவச தடுப்பூசிபோடுவதற்காக அதிக எண்ணிக்கையில் பொதுமக்கள் வருகின்றனர். மேலும், இரண்டாவது தவணை ஊசி போடுவோர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இதனால், ஈரோடு மாவட்டத் திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் தடுப்பூசிகளில், தனியார் மருத்துவமனைகளுக்கான பங்கீடு நிறுத்தப்பட்டு, அரசு மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், தடுப்பூசி பற்றாக்குறையால் ஆரம்ப சுகாதாரநிலையங்களில் இலவச தடுப்பூசிபோட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், கூடுதல் தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துளர்.

இதுதொடர்பாக ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:

ஈரோடு மாவட்டத்தில் 30-ம் தேதி வரை 5 லட்சத்து 12 ஆயிரத்து 399 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். 29-ம் தேதி வரை 1 லட்சத்து 31 ஆயிரத்து 819 பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். கரோனா தடுப்பூசிக்கு இணைய தளத்தில் பதிவு செய்ய தெரியாத நபர்களுக்கு, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் நாள்தோறும் மதியம் 3 மணி முதல் 5 மணிவரை இணையதளத்தில் பதிவு செய்து, மறுநாளே தடுப்பூசி வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு மாவட்டத்திற்கு கூடுதலாக 8500 டோஸ் கரோனா தடுப்பூசி வரப்பெற்றுள்ளது. எனவே, கரோனா வைரஸ் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் உள்ளது. அரசு ஈரோடுமருத்துவக்கல்லூரி மருத்துவ மனை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற் றில் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுகிறது.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதனிடையே தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு அவர்களது செல்போனில் குறுந்தகவல் வரவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறையினர் கூறும்போது, சர்வர் பிரச்சினை காரணமாகதடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் விவரம் இணையதளத்தில் ஏற்றுவதில் தாமதம் ஏற்பட்டு வருவதாக, தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x