Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM
வாணியம்பாடியில் கரோனா விதிகளை மீறிய 6 கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்து அபராதம் விதித்தனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் பெருகி வரும் கரோனா தொற்றை கட்டுப்படுத்த வணிக நிறுவனங்கள், மார்க்கெட், வாரச்சந்தை, உணவகம், தேநீர் கடைகளை திறக்க தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. உணவகங்களிலும், தேநீர் கடை களிலும் பார்சல் சேவை மட்டுமே செய்ய வேண்டும் என அரசு அறிவுறுத் தியுள்ளது.
இந்நிலையில், அரசு விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என்பதை வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் வாணியம்பாடி நகராட்சிக்கு உட்பட்ட நியூடவுன், காதர்பேட்டை, புதூர் மேம்பாலம், பேருந்து நிலையம், சி.எல்.சாலை, மலாங்குரோடு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, காதர்பேட்டையில் உள்ள சூப்பர் மார்க்கெட் கரோனா விதிகளை பின்பற்றாமல் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவின் பேரில் நகராட்சி அதிகாரிகள் மூடி ‘சீல்' வைத்தனர். அதேபோல, பேருந்து நிலையம், நியூடவுன் பகுதியில் தேநீர் கடைகளில் ஆட்களை அதிக அளவில் சேர்த்து வியாபாரம் செய்து வந்த 2 தேநீர் கடைகளுக்கு ‘சீல்' வைக் கப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும், புதூர் மேம்பாலம், பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வந்த 3 தேநீர் கடைகளில் தனி மனித இடைவெளியை கடைபிடிக்காமல் கண்ணாடி டம்ளரில் வாடிக்கை யாளர்களுக்கு தேநீர் வழங்கப்பட்டு வருவது ஆய்வில் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 3 தேநீர் கடைகளுக்கும் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்' வைத்து அபராதம் விதித்தனர்.
வாணியம்பாடி பகுதியில் நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பொது மக்களும், வியாபாரிகளும் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். நகர பகுதிகளில் 3 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள கடைகளை உடனடியாக மூட வேண்டும். உணவகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள காலநேரத்தில் பார்சல் மூலம் மட்டுமே உணவு வழங்கவேண்டும். விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு கடும் அபராதம் விதிப்பதுடன், ‘சீல்' வைக்கும் நடவடிக்கை தொடரும் என வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்ரமணி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT