Published : 30 Apr 2021 03:12 AM
Last Updated : 30 Apr 2021 03:12 AM
கோவை விமானநிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் பிடிபட்ட நபரை விசாரணைக்குப்பின் போலீஸார் விடுவித்தனர்.
இதுகுறித்து பீளமேடு போலீஸார் கூறும்போது, “ஜம்மு - காஷ்மீரை சேர்ந்தவர் டானிராம் ஜோகிந் தர் குமார். இவர் நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து தனியார் விமானத்தில் கோவைக்கு வந்தார். விமானநிலையத்தில் அவரது சூட்கேசை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் துப்பாக்கியில் பயன்படுத்தும் 5 குண்டுகள் இருந்தன.
இதையடுத்து, அவரை பாதுகாப்பு அதிகாரிகள் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீஸார் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜம்மு - காஷ்மீரில்ஏடிஎம் மையத்தில் காவலாளியாக வேலை செய்து வருவதாகவும், பாதுகாப்புக்காக உரிமம் பெற்ற துப்பாக்கி வைத்திருப்பதாகவும், அந்த துப்பாக்கிக்கான குண்டுகளை தவறுதலாக எடுத்து வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். அவரிடம் எழுதி வாங்கிய பிறகு விடுவிக்கப்பட்டார்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT