Published : 29 Apr 2021 03:12 AM
Last Updated : 29 Apr 2021 03:12 AM
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் வேளாண்பொருட்களுக்கான தொகையைஇடைத்தரகர்கள் மூலமாக அல்லாமல் நேரடியாக விவசாயிகளுக்கே வழங்கும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா விவசாயிகளிடமிருந்து தற்போது ராபி பருவத்துக்கான கோதுமை கொள்முதலை அரசு மேற்கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு இதே பருவத்தில் 7.6 மில்லியன் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டில் 22.2 மில்லியன் டன் கோதுமையை கொள்முதல் செய்துள்ளது.
தற்போது கொள்முதல் செய்யப்பட்ட கோதுமைக்கான தொகையை பஞ்சாப் விவசாயிகளுக்கு ரூ.8,180கோடியும், ஹரியாணா விவசாயிகளுக்கு ரூ.4,670 கோடியும் என மொத்தமாக ரூ.13,000 கோடி வழங்கியுள்ளது. இந்தத் தொகையை முதன்முறையாக நேரடியாக விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே செலுத்திஉள்ளதாக அரசு கூறியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT