Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM

‘தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளுக்கு : சேவைகளை மாநகராட்சி வழங்கும்’ :

கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர் களுக்கான அத்தியாவசிய சேவைகள் மாநகராட்சி மூலமாக வழங்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள், வீடுகளைவிட்டு வெளியே வரக்கூடாது. தனிமைப்படுத்திக் கொண்டவர் களின் வீடுகள் அடைத்து வைக்கப்படும். அவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய சேவைகள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்.

ஒரே தெருவில் 3 வீடுகளுக்குமேல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அந்த தெரு முழுமையும் தடுப்பு அமைத்து கண்காணிக்கப்படும். தடுப்பு அமைத்தல் மற்றும் தடுப்பூசி செலுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச் சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

நோய் பரவல் அதிகம் காணப்படும் பகுதிகளில், வாரச் சந்தைகள்கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் செயல்படத் தவறும்பட் சத்தில் அவை முழுமையாக மூடி வைக்கப்படும். உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளின் முன் மக்கள் தனி மனித இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமல் நின்றிருந்தால், அந்த கடைகள் ஒரு வார காலத்துக்கு மூடி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள் ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x