Published : 29 Apr 2021 03:13 AM
Last Updated : 29 Apr 2021 03:13 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு போச்சம்பள்ளி - கொடமாண்டப்பட்டி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே சந்தேகப்படும்படியாக வந்த காரை நிறுத்துமாறு கூறினர்.
ஆனால், காரை ஓட்டுநர் நிறுத்தாமல் சென்றார். உடனே போலீஸார் இருசக்கர வாகனத்தில் காரை துரத்திச் சென்றனர். கொடமாண்டப்பட்டி கிராமம் அருகே காரை போலீஸார் வளைத்துப் பிடித்தனர். காரில் இருந்த 4 பேரில், 2 பேர் தப்பியோடினர். தொடர்ந்து காரை சோதனை செய்தபோது, போச்சம்பள்ளியில் இருந்து கர்நாடக, ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் வேப்பனப்பள்ளியைச் சேர்ந்த முபாரக் (23), ராம்துல்லா (24) என தெரிந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார் 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும், கார், 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீஸார், தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT