Published : 28 Apr 2021 03:13 AM
Last Updated : 28 Apr 2021 03:13 AM

கரோனா பரவல் அதிகரிப்பு ; பெரியாம்பட்டிக்குள் செல்ல தடை :

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் கரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ஊருக்குள் செல்ல தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தருமபுரி

கரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டிக்கு செல்லும் சாலைகள் அடைக்கப்பட்டன.

காரிமங்கலம் வட்டம் பெரியாம்பட்டியில் வஉசி நகர், எம்ஜிஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதுவரை அப்பகுதியில் 18 நபர்களுக்கு தொற்று பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

எனவே, மேலும் தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக பெரியாம்பட்டி பகுதியை முழுமையாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக ஊராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், பெரியாம்பட்டிக்குள் நுழைய வாய்ப்புள்ள சாலைகள் அனைத்தும்போக்குவரத்து தடுப்புகள்வைக்கப்பட்டு அடைக்கப்பட் டுள்ளன.

இது தவிர, தடுப்புகளில் இதுகுறித்த அறிவிப்புகளும் இடம்பெறச் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, பெரியாம்பட்டி கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கை தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. அந்த கிராமத்தை சுகாதாரத் துறையினர் தொடர்ந்து கண்காணித்தும் வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x