Published : 25 Apr 2021 06:09 AM
Last Updated : 25 Apr 2021 06:09 AM
உத்தராகண்ட் மாநிலத்தின் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள இமயமலைத் தொடரில் நேற்று முன்தினம் இரவு திடீரென பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது. சில நிமிடங்களில் அங்கு மிகப்பெரிய பனிச்சரிவு ஏற்பட்டது.
பனிச்சரிவில் சில வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. தகவலறிந்த ராணுவத்தினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் 8 பேர் சடலங்களாக மீட் கப்பட்டனர். 384 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். அவர்கள் அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT