Last Updated : 23 Apr, 2021 03:14 AM

 

Published : 23 Apr 2021 03:14 AM
Last Updated : 23 Apr 2021 03:14 AM

செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்க இஎஸ்ஐ மருத்துவமனையில் - கரோனா நோயாளிகளை குப்புற படுக்கவைத்து சிகிச்சை :

செயற்கை ஆக்சிஜன் தேவையைக் குறைக்கும் வகையில் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கரோனா நோயாளிகளை குப்புற படுக்கவைத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கரோனா வைரஸானது நுரை யீரலை பாதிக்கும்போது ஆக்சிஜன் சுத்திகரிப்பு தடைபடுகிறது. தொற்றால் பாதிக்கப்படுவோரில் சிலருக்கு மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் ஏற்படாமலேயே, ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைகிறது. அவ்வாறு ஆக்சிஜன் தடைபடுவதை முன் கூட்டியே அறிந்துகொள்ள ‘பல்ஸ் ஆக்ஸி மீட்டர்’ பயன்படுத்தப்படுகிறது.

ஆள்காட்டி விரலை பல்ஸ் ஆக்ஸிமீட்டரில் வைத்தால், ரத்தத் தில் உள்ள ஆக்சிஜன் அளவு தெரியவரும். இந்த அளவானது சராசரியாக 96 முதல் 100 வரை இருக்க வேண்டும். 95-க்கு கீழ் இருந்தால் மருத்துவரின் உதவியை நாட வேண்டும்.

ஆக்சிஜன் அளவு 80-க்கு கீழ் குறையும்போது மூச்சுத்திண றல் ஏற்படுகிறது. இவ்வாறு மூச்சுத்திணறல் ஏற்படும் நோயாளி களுக்கு செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது.

கரோனா சிறப்பு மருத்துவ மனையாக செயல்பட்டுவரும் கோவை சிங்காநல்லூர் இ.எஸ்.ஐ மருத்துவமனையில் 640 படுக்கைகள் உள்ளன. இதில், ஆக்சிஜன் இணைப்பு உள்ள 300 படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இருப்பினும், அங்கு செயற்கை ஆக்சிஜன் தேவையை குறைக்கும் வகையில் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தலின்படி விழித்துக்கொண்டிருக்கும்போது நோயாளிகளை குப்புற படுக்க வைத்து சிகிச்சை அளித்து வருகின் றனர்.

இதுதொடர்பாக இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் டி.ரவிக்குமார், மயக்கவியல் துறை பேராசிரியர் செந்தில்குமார் ஆகியோர் கூறியதாவது:

நோயாளிகளை நேராக படுக்க வைக்காமல் குப்புற படுக்க வைத் தால் மூச்சுத்திணறல் குறைகிறது என்பதைக் கண்டறிந்தோம். அதை கரோனா நோயாளிகளுக்கு செயல் படுத்திப் பார்த்தோம்.

குறிப்பிட்ட நேரம்வரை வலதுபுறம், இடதுபுறம் ஒருக்க ளித்து படுக்கும்போதும், முற்றிலும் திரும்பி படுக்கும்போதும் நுரையீர லில் ஆக்சிஜன் பரிமாற்றம் சிறப்பாக நடைபெறுகிறது. இதனால், தொடர்ந்து செயற்கை ஆக்சிஜன் அளிக்க வேண்டிய தேவை இருக்காது. அவ்வப்போது அளித்தால் போதுமானது. அதன்படி, ஒருமணி நேரம் ஆக்சிஜன் அளித்துவிட்டு, ஒரு மணி நேரம் இடைவெளி அளிக்கிறோம். குப்புற படுக்கும்போது உடலில் ஆக்சிஜன் அளவு 85 சதவீதம் இருந்தாலும் பிரச்சினை ஏற்படுவதில்லை.

தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பவர்களுக்கு மட்டும் தொடர்ந்து செயற்கை ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது. குப்புற படுக்க வைத்து சிகிச்சை அளிப்பதால் ஆக்சிஜனுக்கான தேவை, செலவு ஆகியவற்றை குறைக்க முடிகிறது. வயிறு நிறைய சாப்பிட்டுவிட்டு குப்புற படுக்க முடியாது. எனவே, ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்கு ஒருவேளை உணவை இரண்டு வேளை பிரித்து அளிக்கிறோம். நீராகாரங்கள் அளிக்கிறோம். நோயாளிகளுக்கு மூச்சுப்பயிற்சியும் கற்றுத்தரப்படுகி றது. இதன்மூலம் பலர் பயனடைந்து வருகின்றனர்.

10 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் தேவை

மருத்துவமனை வளாகத்தில் ராட்சத ஆக்சிஜன் டேங்க் உள்ளது. இதன்மூலம் நோயாளிகளுக்குத் தேவையான 88 லட்சம் லிட்டர் ஆக்சிஜனை ஒருநாளில் அளிக்க முடியும். ஒரு நோயாளிக்கு ஒரு நிமிடத்துக்கு 4 லிட்டர் ஆக்சிஜன் அளிக்க வேண்டும். தற்போது சராசரியாக ஒருநாளைக்கு சுமார் 10 லட்சம் முதல் 15 லட்சம் லிட்டர் ஆக்சிஜன் மட்டுமே தேவைப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x