Published : 23 Apr 2021 03:15 AM
Last Updated : 23 Apr 2021 03:15 AM

புதுச்சேரியில் 987 பேருக்கு கரோனா : மேலும் 5 பேர் உயிரிழப்பு

புதுச்சேரியில் புதிய உச்சமாக ஒரே நாளில் கரோனா தொற்று ஆயிரத்தை நெருங்கிய நிலையில், மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகா தாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் புதி தாக 4,675 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 837 பேர், காரைக்காலில் 89 பேர், ஏனாமில் 40 பேர், மாஹேவில் 21 பேர் என மொத்தம் 987 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. இதனால் கரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண் ணிக்கை 50 ஆயிரத்து 580 ஆக அதிகரித்துள்ளது.

இதில் ஜிப்மரில் 226 பேர், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 291 பேர், கோவிட் கேர் சென்டரில் 392 பேர் என 909 பேரும், காரைக்காலில் 60 பேர், ஏனாமில் 101 பேர், மாஹேவில் 37 பேர் என மருத்துவமனைகளில் 1,107 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 3,676 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காரைக்காலில் 722 பேர், ஏனாமில் 215 பேர், மாஹேவில் 203 பேர் என 4,816 பேர் என மாநிலம் முழுவதும் மொத்தம் 5,923 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரி லாஸ் பேட்டை பாரதி நகர் 1 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த 62 வயதுமூதாட்டி, நெசவாளர் நகரைச் சேர்ந்த 72 வயது முதியவர் ஆகியஇருவரும் ஜிப்மரிலும், வடுவுக்குப் பத்தைச் சேர்ந்த 55 வயது பெண், 57 வயது ஆண் ஆகிய இருவரும் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், காரைக்கால் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்த 70 வயது முதியவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் உயிரி ழந்துள்ளனர். இதனால் உயிரி ழந்தோரின் எண்ணிக்கை 726 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.44 சதவீதமாக உள்ளது.

இதனிடையே நேற்று புதுச் சேரியில் 400 பேர், காரைக்காலில் 24 பேர், ஏனாமில் 15 பேர், மாஹேவில் 25 பேர் என மொத் தம் 464 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 931 (86.85 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது.

மொத்தம் இதுவரை 7 லட்சத்து 48 ஆயிரத்து 791 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6 லட்சத்து 77 ஆயிரத்து 819 பரிசோ தனைகளுக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.

இதுவரை சுகாதாரப் பணியாளர்கள் 30 ஆயிரத்து 857 பேர், முன்களப் பணியாளர்கள் 18 ஆயிரத்து 174 பேர், பொதுமக்கள் 1 லட்சத்து 10 ஆயித்து 842 பேர் என 1 லட்சத்து 77 ஆயிரத்து 47 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x