Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM

கல்யாண் ஜுவல்லர்ஸ் புதிய ஷோரூம் : நாகர்கோவிலில் 24-ம் தேதி திறப்பு

கல்யாண் ஜுவல்லர்ஸ் புதிய ஷோரூம் நாகர்கோவிலில் ராமவர்மபுரம் கே.பி.சாலையில் வரும் 24-ம் தேதி காலை 11 மணிக்கு திறக்கப்படுகிறது.

இந்நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டி.எஸ். கல்யாணசுந்தரம் கூறியிருப்பதாவது: கல்யாண் ஜூவல்லர்ஸின் மிகவும் பிரபலமான ஐஸ்வர்யம் கலெக்‌ஷன் நகைகள் இங்கு கிடைக்கும். பலதரப்பட்ட நவீன டிசைன்களிலும், மக்களின் விருப்பத்துக்கேற்பவும் நகைகளை வடிவமைத்து விற்பனை செய்வதில் கல்யாண் ஜூவல்லர்ஸ் முக்கியத்துவம் அளிக்கிறது. எங்கள் ஷோரூம்கள் இந்தியா முழுவதும் 107 இடங்களில் உள்ளன. தமிழகத்தில் 24ஆக உயர்ந்துள்ளது. இது எங்கள் தயாரிப்பு மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையின் அடையாளம்.

திறப்பு விழாவையொட்டி சிறப்பு சலுகையாக வைர நகைவாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 25 சதவீதம் வரையும், கற்கள் பதித்த நகைகளுக்கு 20 சதவீத தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் தாங்கள் வாங்கும் நகையின் மொத்த தொகையில் 10 சதவீத தொகையை முன்கூட்டியே செலுத்துவதன் மூலம் விலை பாதுகாப்பு சலுகையும் வழங்கப்படும். நகை வாங்கும் ஒவ்வொருவரையும் மகிழ்விக்கும் விதமாக பல சலுகைகள் வழங்கப்படுகின்றன. மேலும், தங்க நகை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கழிவு கட்டணத்தில் 50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை மே 30-ம் தேதி வரை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x