Published : 22 Apr 2021 03:15 AM
Last Updated : 22 Apr 2021 03:15 AM
இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளதால் வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் ரயில் மூலம் சொந்த ஊருக்கு செல்ல காட்பாடிரயில் நிலையத்தில் குவிந்து வருவதால் சமூக இடைவெளி கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதிகாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இரவு10 மணிக்கு மேல் பேருந்து, ஆட்டோ, கார், வேன் என எந்த வாகனமும செல்ல அனுமதி யில்லை என்பதால் வெளியூர்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மருத்துவம், சுற்றுலா, கல்வி, ஆன்மிகம் என பல்வேறு காரணங்களுக்காக வேலூரில் தங்கியிருந்த வட மாநிலத்தினர் சொந்த ஊருக்கு செல்ல ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்து வருகின்றனர். அதன்படி, வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் வழியாக வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிக்க ஆயிரக்கணக் கான பயணிகள் நேற்று ரயில் நிலையத்தில் கூடினர்.
காட்பாடி ரயில் நிலையத்தில் உள்ள 1-வது நடைமேடை, 2 மற்றும்3-வது நடைமேடைகளில் வட மாநிலம் செல்லும் ரயில்கள் வந்து நின்று செல்லும் என்பதால் அந்த 3 நடைமேடைகளில் கட்டுக்கடங்காத கூட்டம் நேற்று கூடியது. இதைக்கண்ட ரயில்வே பாதுகாப்புப்படை காவல் ஆய்வாளர் டேப்ரத்சத்பதி, உதவி காவல் ஆய்வாளர் நாகராஜ் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் கூட்டத்தை ஒழுங்குப்படுத்தினர்.
முகக்கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு இலவச முகக்கவங்களை வழங்கி, கரோனா பரவல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அதேநேரத்தில், முன்பதிவு செய்து ரயிலில் பயணிக்கும் பயணிகளை மட்டுமே ரயில் நிலையத்துக்குள் அனுமதிப்பட்டு வருவதால் வழியனுப்ப வந்தவர்களை ரயில் நிலையம் முகப்பிலேயே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT