Published : 21 Apr 2021 03:15 AM
Last Updated : 21 Apr 2021 03:15 AM

அலங்காநல்லூரில் மதுபானம் விற்றவர் கைது :

மதுரை மாவட்டம், அலங்கா நல்லூர் பேருந்து நிலையம் அருகே சட்ட விரோதமாக மது விற்பதாக அலங்கா நல்லூர் போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

உதவி ஆய்வாளர் திருமலைராஜா, காவலர் பாண்டி செல்வம் ஆகியோர் அப்பகுதியில் கண்காணித்தனர். இதில் கல்லணை மேற்கு தெருவைச் சேர்ந்த ராஜா (60) என்பவர் பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் கம்மங்கூழ் விற்பனை செய்வது போன்று மதுபானம் விற்றது தெரிய வந்தது.

போலீஸார் அவரைக் கைது செய்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x