Published : 20 Apr 2021 03:14 AM
Last Updated : 20 Apr 2021 03:14 AM

இரட்டை கொலை வழக்கில் மேலும் ஒருவர் சரண் :

அரக்கோணம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய இளைஞர் வேலூர் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த சித்தாம்பாடி கவுதம் நகரில் இரு பிரிவு இளைஞர்களுக்கு இடையே கடந்த 7-ம் தேதி இரவு ஏற்பட்ட மோதலில் சோகனூர் கிராமத்தைச் சேர்ந்த அர்ஜூனன் (25), செம்பேடு கிராமத்தைச் சேர்ந்த சூர்யா (27) ஆகியோர் கொலை செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்.

பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவா , வேடல் கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் வேலூர் ஜெ.எம் 5-வது நீதிமன்றத்தில் கடந்த வாரம் சரணடைந்த நிலையில், வழக்கில் தொடர்புடைய மேகவர்ணம் என்பவர் 2 தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், வேலூர் ஜெ.எம் 5-வது மாஜிஸ்திரேட் முன்னிலையில், பெருமாள்ராஜபேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜசேகர் (28) என்பவர் நேற்று சரணடைந்தார். அவரை, 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். இவ்வழக்கில் இதுவரை 8 பேர் கைதான நிலையில், 3 பேர் சரணடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x